நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாமக 2300775 வாக்குகளை பெற்று 5.3 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது.

எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது பாமக. அதன் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், மாநிலம் முழுவதும் பாமகவுக்கு 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேர் பாமகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மேலும், நாங்கள் அரசியலை மக்கள் சேவையாக செய்து வருகிறோம். ஆனால் திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்கின்றனர். திராவிட கட்சிகள் பண பலத்தினால் தான் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். தோல்விகளால் நாங்கள் துவண்டு போய் விடவில்லை, முன்பை விட வேகமாக பணியாற்றுவோம் என்றார்.

வருங்காலங்களிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. பாமக தனித்தே போட்டியிடும் என கூறிய நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது என்றார்.

வெற்றி பெற்ற அதிமுக, திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட அன்புமணி, சட்டசபையில் நாங்கள் இடம் பெறாவிட்டாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம் என்றார்.

இனிமேல் தனித்து தான் போட்டியிடுவோம்: அடம்பிடிக்கும் அன்புமணி



தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் சிவக்குமார் முதல்நபராக வாழ்த்து தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. இதனால், அக்கட்சி சார்பில் மீண்டும் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், நேற்று தேர்தல் வெற்றி தோல்வி நிலவரம் வெளியாகிக் கொண்டு இருந்தது. யார் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என கிளைமாக்ஸ் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளே தயக்கம் காட்டிய நிலையில், நடிகர் சிவக்குமார் , அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல் நபராக பொக்கே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் சிவக்குமாரின் இந்த அதிமுக பாசத்தை தமிழ் திரையுலகமும், அரசியல் களமும் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்கிறது.

நான்தான் பஸ்ட், மற்றவர்கள் நெக்ஸ்ட்: இது சிவக்குமார் ஸ்டைல்



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 98 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் அதிக பெரும்பாண்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது அதிமுக.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 33 தொகுதிகளில் தோல்வியை தழுவியது திமுக கூட்டணியின் தோல்விக்கு ஒரு முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்ததால் தான் திமுக தோல்வியடைந்து விட்டதாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் கோபமடைந்து உங்களது நையாண்டித் தனமான, குருட்டுத் தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கூறினார்.

திமுகவின் தோல்விக்கு காரணம் காங்கிரஸா?: ஸ்டாலின் கோபம்



நன்றாக நடிக்கிறார், நற்பணிகள் செய்கிறார், நல்லவிதமாக நடந்து கொள்கிறார். போதாததற்கு ஒரு படத்திற்கு ஒன்பது படங்களுக்கான உழைப்பை தருகிறார்.

இருந்தும் அஜித், விஜய் போல் அசட்டையாக ஒரு வெற்றியை பெற சூர்யா போராட வேண்டியிருக்கிறது.

2013 -க்குப் பிறகு கடந்த 3 வருடங்களில் ஒரு வெற்றியைக்கூட சூர்யா தரவில்லை. சிங்கம் இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டால் வருடங்களின் எண்ணிக்கை கூடும். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 24 படமும் பல இடங்களில் மண்ணை கவ்வியுள்ளது. கைவசம் இருக்கும் ஒரே நம்பிக்கை எஸ் 3.

எஸ் 3 படத்துக்குப் பிறகு யார் இயக்கத்தில் நடிப்பது? என்ன மாதிரி கதையை தேர்வு செய்வது? என்ற மாபெரும் குழப்பத்துக்கு சூர்யா ஆளாகியிருக்கிறார். சுமாரான கதையில் சுமாரான நடிப்பை தரும் அஜித், விஜய் வெற்றி பெறும்போது நமக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி என்ற குடைச்சலும் சூர்யாவை சூழந்திருக்கிறது.

இதுக்கு பேருதான் அதிர்ஷ்டம்ங்கிறது.

சிங்கத்துக்கே இப்படியொரு சிக்கலா...?



சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக பெற்றுள்ள வாக்குகளின் வித்தியாசம் வெறும் 1.1 சதவீதம் மட்டுமே என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகச் சட்டப் பேரவைக்கான 15வது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து 232 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும் தி.மு. கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 இலட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க. அணிக்கு 1 கோடியே 76 இலட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகள் அதாவது 40.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.கழக அணிக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் தான்; அதாவது 1.1 சதவிகிதம் வாக்குகள் தான் இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

எப்படி என்றாலும் அவர்கள் ஆளும்கட்சி. நாம் எதிர்க் கட்சி. எதிர்க் கட்சி என்றால், தமிழகச் சட்டப் பேரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 89 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, திருவாரூர் தொகுதியில் கழக வேட்பாளராக இரண்டாவது முறையாக அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் போட்டியிட்ட நிலையில், 1 இலட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளை அளித்து, தமிழ்நாட்டிலே மிக அதிக வித்தியாசமான 68 ஆயிரத்து 366 வாக்குகள் கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைக் குவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

திமுக-அதிமுகவிற்கு இடையே 1.1 சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் : கருணாநிதி



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தோல்வி அடைந்தது குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

காட்டுமன்னார்கோயில் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மக்கள் நலக்கூட்டணி சார்பில், மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் வெறும், 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த தொகுதியில், திருமாவளவன் என்கிற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு, அவர் 289 வாக்குகளை அள்ளிவிட்டாராம்.

இந்த தொகுதியில் உள்ள சிலர் அந்த திருமாவளவன் தான் இந்த திருமாவளவன் என கருதி மாற்றி வாக்களித்துவிட்டாக கூறப்படுகிறது. இதனாலே, வி.சி.தலைவர் திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆளும் கட்சி வரித்த வலையில் இதுவும் ஒரு வகை என அரசியலில் வர்ணிக்கப்படுகிறது.

ஐய்யோ... சொக்கா...திருமாவளவன் வீழ்ந்தது எப்படி தெரியுமா?



அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நான் அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களார்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி, தமிழக தேர்தல் கமிஷன் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் கடந்த 12ஆம் தேதி நடக்க இருந்த தேர்தலை நிறுத்தியது.

மேலும், அந்த இரண்டு தொகுதிகளிலும் வருகிற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்னும் மூன்று வாரங்களுக்கு அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி “ தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி, திமுகவிற்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள்.

அங்கு தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தாவிட்டால் அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன் : கருணாநிதி அதிரடி



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சமக தலைவர் சரத்குமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 26001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அனிதா ராதாகிருஷ்ணன் 88357 வாக்குகளும், சரத்குமார் 62356 வாக்குகளும் பெற்றனர்.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சரத்குமாரின் மனைவி ராதிகா, திருச்செந்தூர் மக்கள் காட்டிய அன்பு, பாசத்திற்கு நன்றி. இந்தத் தேர்தலில் நாங்கள் தோற்றதாகக் கருதவில்லை. மீண்டும் வெற்றிக்குப் போராடும் ஒரு வாய்ப்பாகத்தான் கருதுகிறோம் என கூறினார்.

சரத்குமாரின் தோல்விக்கு ராதிகாவின் பதில் என்ன தெரியுமா?



புவியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் மோதியுள்ளது என ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அப்படி மோதிய விண்கல் 20-30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

வட மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பாறைகளில், அந்தப் பெரும் மோதலில் வெடித்துச்சிதறி ஆவியாகிபோன சில தாதுப்பொருட்கள் சிறிய கண்ணாடிபோன்ற மணிகளில் காணப்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அவ்வளவு பெரிய விண்கல் பூமியின் மீது மோதியது நிலநடுக்கங்களையும், எரிமலை வெடிப்புகளையும் உலகம் முழுவதிலும் ஏற்படுத்தியிருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல்



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து ஆட்சியமைக்க உள்ளது.

கடந்த அமைச்சரவையில் இருந்த பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போதைய அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அமைச்சர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக அமைக்க இருக்கும் ஆட்சியில் இடம்பெற இருக்கும் அமைச்சர்களின் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வரும் 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இதுகுறித்த விவரம் பின்வருமாறு.


1. ஆர்.கே. நகர்-ஜெ.ஜெயலலிதா-முதல்வர்-உள்துறை, சட்டம் ஒழுங்கு

2. போடிநாயக்கனூர்-ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை

3. மயிலாப்பூர்-ஆர்.நடராஜ்-சட்டம் மற்றும் சிறைத்துறை

4. ராயபுரம்-ஆர்.ஜெயகுமார்-மீன்வளம், கால்நடைத் துறை

5. ஆவடி-மாபா.பாண்டியராஜன்-தகவல் தொழில்நுட்பம்

6. மதுரவாயல்-பா.பெஞ்சமின்- உள்ளாட்சி, நகர நிர்வாகம்

7. திருத்தணி-பி,எம்.நரசிம்மன்-கூட்டுறவுத் துறை

8. ஜோலார்பேட்டை-கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை

9. செய்யாறு-தூசி கே.மோகன்-பால்வளத் துறை

10. வாணியம்பாடி-நீலோபர் கபில்-சிறுபான்மையினர் நலன்

11. பாப்பிரெட்டிப்பட்டி-பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை

12. விழுப்புரம்-சி.வி.சண்முகம்-பொதுப்பணித் துறை

13. உளுந்தூர்பேட்டை-குமரகுரு-மதுவிலக்கு அமலாக்கத் துறை

14. ஏற்காடு-சித்ரா-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

15. எடப்பாடி-கே.பழனிச்சாமி-தொழிலாளர் நலத் துறை

16. ராசிபுரம்-சரோஜா-மகளிர் நலன், சமூக நலத் துறை

17. குமாரபாளையம்-கே.டி.தங்கமணி-கைத்தறி, ஜவுளித் துறை

18.கோபிசெட்டிபாளையம்-கே.ஏ.செங்கோட்டையன்-போக்குவரத்துத் துறை

19. திருப்பூர் வடக்கு-விஜயகுமார்-இந்து சமய அறநிலையத் துறை

20. தொண்டாமுத்தூர்-எஸ்.பி.வேலுமணி-வேளாண்மைத் துறை

21. பொள்ளாச்சி-வி. ஜெயராமன்-சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை

22. திண்டுக்கல்-சி. சீனிவாசன்-வருவாய்த் துறை

23. வேதாரண்யம்-ஓ.எஸ்.மணியன்-பத்திரப் பதிவு, வணிகவரித் துறை

24. கடலூர்-எம்.சி.சம்பத்-வனத்துறை

25. நன்னிலம்-காமராஜ்-உணவுத் துறை

26. விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை

27. மதுரை மேற்கு-செல்லூர் ராஜு-நீர்ப்பாசனத் துறை

28. திருமங்கலம்-ஆர்.வி.உதயகுமார்-மின்சாரத் துறை

29. சிவகாசி-கேடி.ராஜேந்திர பாலாஜி-செய்தித் துறை

30. உடுமலை-ராதாகிருஷ்ணன்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை

31. ஸ்ரீவைகுண்டம்-சண்முகநாதன்-கனிமவளத் துறை

32. ராதாபுரம்-இன்பதுரை-சுற்றுலாத் துறை

இதுதவிர, அவினாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.தனபால் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்பார் என்றும் துணைசபாநாயகராக மேட்டூரில் வெற்றி பெற்ற எஸ்.செம்மலை பொறுப்பேற்கலாம் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அமைச்சரவை பட்டியல் இணையத்தில் பரவி வருகிறது.

அதிமுக புதிய அமைச்சரவை பட்டியல்: இணையத்தில் கசியும் தகவல்



நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய சரிவை சந்தித்த விஜயகாந்தின் தேமுதிக தேர்தல் ஆணையத்தில் தனது கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்து, தேமுதிகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முரசு சின்னத்தையும் இழக்கிறது.

2006-இல் முதல் முறையாக தேர்தலை சந்தித்த தேமுதிக 10 சதவீத வாக்குகளை பெற்று அனைவரையும் வியக்க வைத்தது. மீண்டும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை பெற்றது.

இதனால் தமிழக அரசியலில் விஜயகாந்தின் மவுசு கூடியது. 2011 சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு இழுக்க போட்டி போட்டது. கடைசியில் அதிமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக 7.8 சதவீத வாக்குகளுடன் 29 எம்.எல்.ஏ-க்களையும் பெற்று எதிர்கட்சியாக உருவெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பின்னர் அதிமுக உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் 2015 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் 5.1 சதவீதமாக தனது வாக்கு வங்கியை குறைத்துக்கொண்டது.

இருந்தாலும் விஜயகாந்துக்கான மவுசு குறையவில்லை, இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு இழுக்க கட்சிகள் போட்டி போட்டன. கடைசியில் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் தேமுதிக மண்ணை கவ்வியது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் தோல்வியடைந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த தேர்தலில் தேமுதிக வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள் இருக்க வேண்டும். இதன் மூலம் தேமுதிக மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழப்பதுடன் முரசு சின்னத்தையும் இழக்கிறது.

கடந்த முறை தேமுதிக 5.1 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தாலும் 29 எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியாக இருந்ததால் அந்த அங்கீகாரத்தை இழக்காமல் இருந்தது. இந்த முறை எந்தவித கவசமும் இல்லாமல் வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டும் வைத்துள்ளதால் தேமுதிக மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கிறது.

அங்கீகாரத்தை இழந்த தேமுதிக: முரசு சின்னத்தை இழக்கிறது!



மநகூட்டணி மற்றும் தேமுதிகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட
விஜயகாந்த் உளூந்தூர்பேட்டையில் டெபாசிட்கூட வாங்காமல் மோசமான தோல்வியை தழுவினார்.

குறைவான வாக்கு சதவீதம் காரணமாக மாநில கட்சிக்கான அந்தஸ்தை தேமுதிக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படி அரசியல் கட்சி அந்தஸ்தை இழக்கும்பட்சத்தில், முரசு சின்னத்தையும் அக்கட்சி இழக்கக்கூடும்.

இந்த மாபெரும் அதிர்ச்சியில் இருக்கும் தனது கட்சி தொண்டர்களை ஊக்குவிக்கும் விதமாக, 'நம் வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது, மனம் தளரவேண்டாம். நாம் ஆட்சியமைப்பது உறுதி' என்று விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் 'தமிழன் என்று சொல்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


தோல்வியை சகஜமாக எடுத்துக் கொண்டு தலைவரே படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் என்று தேமுதிக தொண்டர்களும் ஆசுவாசம் அடையும்வகையில் 'தமிழன் என்று சொல்' படத்தின் புகைப்படங்களை விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டெபாசிட் இழந்த கையோடு நடிப்புக்கு திரும்பிய விஜயகாந்த்



வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலைகொண்டிருந்தது அது தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. ரோணு என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஒடிசா நோக்கி நகர்வதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஒடிசா நோக்கி நகரும் இந்த புயல் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் வங்கதேசத்தில் சிட்டக்காங் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வட தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குமரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் இரணியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கனமழை காரணமாக பள்ளியாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் குமரியில் இருந்து திப்ரூகருக்கு செல்லும் ரயிலும், நாகர்கோயிலில் இருந்து மங்களூரு செல்லும் ரயிலும் செல்லவில்லை. அந்த வழித்தடத்தில் 7 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உருவாகியது ரோணு புயல்: தமிழகத்தில் மீண்டும் மழை



திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 93353 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற சீனிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பதவியேற்கும் முன்னரே எம்.எல்.ஏ. ஒருவரின் உடல்நிலை அபாயகட்டத்தில் இருப்பது அதிமுக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

65 வயதான சீனிவேல் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் மதுரை மாவட்டம் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாக வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று மாலை அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக ஒரு சில தனியார் தமிழ் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் எனவும், மரணமடையவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனிவேல் கவலைக்கிடம்: அதிமுகவினர் சோகம்


Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre
Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre. Chief Minister Sri K. Chandrashekar Rao and Apple CEO Mr. Tim Cook are also seen.
The new Apple Indian office in Hyderabad facility, located on the Waverock SEZ campus, will house 4,000 developers who will work on Apple’s Maps development
4000 Indians is also equivalent to about 3 Silicon Valley salaries.Breakdown MIGHT go like this:
10 executive team interfacing with International Operations in Cupertino
40 development / build engineers interfacing with the designers in Cupertino
100 facilities (maintenance, security, cafeteria, etc.)
150 personnel management (reception, secretary, group activities)
200 IT
500 map QA managers
3000 map QA and refinement
Well "Maps" is probably an Apple definition for "Customer Call Center".Wonder how long it'll be till Apple moves it's customer service to Hyderabad .Tim's up for anything that'll save a few bucks.Basically Cook says "We will be hiring thousands of pea"NuTs" to manually enter stuff into the database which cannot possibly scan or automate in any other way in the US. I've never opened up the Apple's Maps intentionally N don't think this move is any related to maps at all.
I think what Tim Cook meant was we hire Indians in mass, not because they're good, but because they are cheap.Only $25 million? That is like $25 to TiMmy .In other words, Apple needs a much cheaper way to get Maps up to par..Well done Tim and co - Hire thousands of indian's and give them iphones, then apple's market share goes up there. Brilliant!

Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre

Tamil Actors and their Beautiful Wives

Tamil Actors and their Beautiful Wives


Tamil Nadu Election 2016 Result Special | The Beep Show | RJ Vignesh

Tamil Nadu Election 2016 Result Special | The Beep Show | RJ Vignesh


Kingmaker Vaiko Master Plan – Tamilnadu Election 2016 Result

Kingmaker Vaiko Master Plan – Tamilnadu Election 2016 Result





Ayutha Ezhuthu 21-05-2016

Ayutha Ezhuthu 21-05-2016


CCTV Footage has been released for the Police attack of youngster in UP

CCTV Footage has been released for the Police attack of youngster in UP


Simbu has spoken in the favour of Ruling Party after Voting

Simbu has spoken in the favour of Ruling Party after Voting



Speed News 21-05-2016 - Puthiya Thalaimurai

Speed News 21-05-2016 - Puthiya Thalaimurai





Puthiya Thalaimurai Nerpada Pesu 21-05-16
Indepth debate on social welfare and women's welfare schemes

Puthiya Thalaimurai Nerpada Pesu 21-05-16







 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Aadhira Sun Tv Serial 20-05-16 Episode 288






 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Indira 20-05-16 Raj Tv Serial Episode 65





 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

EMI Thavanai Murai Vazhkai Sun Tv Serial 20-05-16 Episode 54






Moondru Mudichu 20-05-16 Polimer Tv Serial Episode 1131





Adhu Idhu Yedhu - 21st May 2016 | Promo





Connexion | 22nd May 2016 - Promo





Neeya Naana - 22nd May 2016 | Promo




Vijay Tv Show Super Singer 5 20-05-16









Polimer Tv Serial Inai Kodugal 20-05-16








Solvathellam Unnmai 20-05-16 Zeetamil





 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Kanchana 20-05-16 Raj Tv Serial Episodse 210





Vijay Tv Serial Kalyanam Mudhal Kadhal Varai 20-05-2016 Episode 389