சரத்குமாரின் தோல்விக்கு ராதிகாவின் பதில் என்ன தெரியுமா?

Share this :
No comments


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சமக தலைவர் சரத்குமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 26001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அனிதா ராதாகிருஷ்ணன் 88357 வாக்குகளும், சரத்குமார் 62356 வாக்குகளும் பெற்றனர்.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சரத்குமாரின் மனைவி ராதிகா, திருச்செந்தூர் மக்கள் காட்டிய அன்பு, பாசத்திற்கு நன்றி. இந்தத் தேர்தலில் நாங்கள் தோற்றதாகக் கருதவில்லை. மீண்டும் வெற்றிக்குப் போராடும் ஒரு வாய்ப்பாகத்தான் கருதுகிறோம் என கூறினார்.

No comments :

Post a Comment