டெபாசிட் இழந்த கையோடு நடிப்புக்கு திரும்பிய விஜயகாந்த்

Share this :
No comments


மநகூட்டணி மற்றும் தேமுதிகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட
விஜயகாந்த் உளூந்தூர்பேட்டையில் டெபாசிட்கூட வாங்காமல் மோசமான தோல்வியை தழுவினார்.

குறைவான வாக்கு சதவீதம் காரணமாக மாநில கட்சிக்கான அந்தஸ்தை தேமுதிக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படி அரசியல் கட்சி அந்தஸ்தை இழக்கும்பட்சத்தில், முரசு சின்னத்தையும் அக்கட்சி இழக்கக்கூடும்.

இந்த மாபெரும் அதிர்ச்சியில் இருக்கும் தனது கட்சி தொண்டர்களை ஊக்குவிக்கும் விதமாக, 'நம் வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது, மனம் தளரவேண்டாம். நாம் ஆட்சியமைப்பது உறுதி' என்று விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் 'தமிழன் என்று சொல்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


தோல்வியை சகஜமாக எடுத்துக் கொண்டு தலைவரே படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் என்று தேமுதிக தொண்டர்களும் ஆசுவாசம் அடையும்வகையில் 'தமிழன் என்று சொல்' படத்தின் புகைப்படங்களை விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

No comments :

Post a Comment